Tuesday, August 11, 2009

”நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர்". 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தோழர் தங்கதுரை நிகழ்த்திய உரை.

”கனம் நீதிபதி அவர்களே!
ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.

எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.

இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?

நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.

இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?

காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?

பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.

இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?

பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.

இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.

எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.

எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.

ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.

வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு - நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு - தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.

உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்?. அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.

இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.”

விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ”இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?” என்றார்.

”எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.

நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸாரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.

தோழர் தங்கதுரை
24/02/1983

நன்றி: thesamnet.co.uk

Wednesday, June 17, 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...
ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
..........

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும் உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

கவிதாயினி தாமரை

Monday, April 27, 2009

இங்கிலாந்தில் பயங்கரவாதி இந்தியாவில் தியாகி......

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.

1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் இ படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் (Michael O'Dwyer) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.

இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.

துவள வில்லை உதம் சிங்இ அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-ஆயச-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்



மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-துரடல-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.

பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர்இ ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.

சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.................

400௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்.....

ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400௦௦ பொது மக்களை மற்றும் 800௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா?

“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....

அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.

பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?

நல்ல நியாம்டா சாமி.............

சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ழூழூ தின்னும் மனிதர்களுக்குஇ இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......

ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன்இ யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன்இ விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.

ஆனால் ரன்பீர் சிங்கோஇ 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால்இ நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...

யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''


ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................

மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.

இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...

பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?

அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?

சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?

இந்த வழக்கில் மேலும் நளினிஇ பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?

இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???

இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!

எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் பீ தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறதுஇ தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........

அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை

மனிதனாக இருந்தால் போதும்.....


இப்படிக்கு
மனிதர்
தமிழர்
இந்தியர்

மின்னஞ்சல் மூலம் தமிழக நண்பரிடம் இருந்து பெற்றது

Tuesday, April 21, 2009

ஒரு தியாகியின் கனவு... 22 வருடங்களின் பின்.....

கனவு மெய்ப்பட வேண்டும்.

பாரதி சொன்ன சொல்லின்வழி ஒரு தியாகி கண்ட கனவு 22 வருடங்கள் கழிந்தே நிஜமாக தொடங்கியுள்ளது.

ஆமாம் யாரந்த தியாகி....

அவர் கண்ட கனவுதான் என்ன....


அவுஸ்திரேலியாவில்


டென்மார்க்கில்


பிரான்ஸில்


நெதர்லாந்தில்


நேர்வேயில்


ஒஸ்ரியாவில்


அமெரிக்காவில்


சுவிஸில்


ஒட்டாவாவில்

அவரின் கனவு அவர் குரலில்

1987இல் அவர் மக்களிடம் கேட்ட மக்கள் புரட்சி இன்றுதான் வலுப்பெறுகின்றது.
22 வருட காலம் கடந்த இந்த தெளிவு அவர் கொண்ட இலட்ச்சியத்தை பெற்று கொடுக்குமா?
காலத்தின் பதிலுக்காய் காத்திருப்புகள் தொடருகின்றது....

Tuesday, March 17, 2009

திருமண வாழ்க்கைச் சமன்பாடுகள்

இது எனது ஆக்கம் அல்ல....
நான் படித்து சுவைத்தது......
இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

சமன்பாடு - 1

மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்

ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்

ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2

ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்

ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை

ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3

பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்

ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை

ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.

ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,

ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்

அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.

அப்படீன்னா,

ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!


முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தவும்

நன்றி
எம்.ரிஷான் ஷெரீப் (விகடன்

Tuesday, February 10, 2009

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி!

ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.

இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.

இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்கு தெரிந்த உண்மை. கொழுத்தும் வெய்யிலில் தீக்குளித்தார்கள் மெல்பேர்ன் நகரில் 5000 தமிழர்கள். பட்டிணியிருந்து உடல் வருத்தி கருணை காட்டுங்கள் என இளையோர் மன்றாடிக் கேட்டார்கள் சிட்னியில். கன்பராவில் 4000 தமிழர்கள் என்றுமில்லாதவாறு அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.

ஆனாலும் என்ன பயன்? என்ன நடந்தது? ஒன்றுமேயில்லை. வெறும் காகிதத்தில் உப்புச்சப்பில்லாத பதில் அறிக்கைகள். அதுகூட சிறிலங்கா அரசாங்கத்தின் மனம் நோகக்கூடாது என்று கஸ்ரப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பது எல்லோரும் அறிந்த கசப்பான உண்மை. ஆனால் கண்துடைப்புக்காக சில தாமதமான வாக்குறுதிகள் வழங்பட்டது ஏனோ மனதுக்கு ஆறுதல். அவைகூட கானல் நீர்தான்.

வாழ்க்கை தேடி வந்த நாட்டையும் மக்களையும் குறை சொல்வதாய் சிலர் முணுமுணுப்பது என் காதுகளுக்கு கேட்கிறது. அடைக்கலம் தந்த நாட்டை ஆலயங்காளாக நினைக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவன். நாயிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்த அகதிகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று நினைக்கும் போதுதான் மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது.

உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதை ஒரு சீனாக்காரனோ இல்லை அவுஸ்ரேலிய பழங்குடியினரோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவுஸ்ரேலிய குடியுரிமை உடைய அவுஸ்ரேலிய இளையோர் 4 பேர் உண்ணாவிரத போராட்டம் என்று ஒரு 5 நிமிடத்துக்கு இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதுவே இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியிருக்கும். நாடே திரும்பிப்பார்த்து கேள்வி கேட்டிருக்குமா? இல்லையா? ஆனால் அவுஸ்ரேலிய மண்ணின் குடியுரிமை பெற்ற இளையோர் 72 மணிநேரத்துக்கு மேலாக பட்டினியிருந்து குரல் எழுப்பி என்ன பலன்?

கடைசியில் அவர்கள் அந்த புனிதமான அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டதுதான் வேதனை தருகின்றது. மகாத்மாகாந்தி மேல் கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னும் வெள்ளைக்காரர்களுக்கு போகவில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமத்துவமாக சரிசமானமாக வேறுபாடின்றி பார்க்கவேண்டியது ஒரு நல்ல மாந்தை நேய அரசின் கடமையாகும்.

மனிதநேயம் என்பதை வெறும் வாயினால் பேசினால் மட்டும் போதாது. மனச்சாட்சியோடு அதை செயல் வடிவத்திலும் காட்டவேண்டும். அவ்வாறு வேறுபாடு காட்டப்படும் இடத்து அதை தட்டிக்கேட்க வேண்டியது எமது உரிமை. ஆனால் இது நமது வேலையல்ல. தாயகத்தில் நாள்தோறும் 50,100 என நரபலி எடுக்கிறது சிறிலங்கா பேரினவாத இராணுவம். இதற்கு துணைபோகிறது இந்திய ராணுவமும் சர்வதேச நாசகார படைகளும்.

புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் இப்போது ஒரு தீர்மானத்தை ஒருமனதாக எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? தலைவர் பிரபாகரன் வன்னியை விட்டு ஓடிவிட்டாரா? விடுதலைப்புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு வலிமை குன்றிவிடார்களா? காடுகளுக்குள் ஓடி ஒழிந்துவிடார்களா? இன்னும் சில நாட்களில் ஆயுதங்களை எல்லாம் போட்டுவிட்டு சரணடையபோகிறார்களா? இப்படியெல்லாம் பலகேள்விகளை கேட்டுக்கொண்டிக்கிறார்கள் பலபேர்.

அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் தான். புலி பசித்தாலும் புல்லை தின்னாது. ஒரு மாதமாக 1500 அப்பாவி பொதுமக்களை நரபலி எடுத்து 5000 விடுதலைப்புலிகளை கொன்றொழித்துவிட்டதாக சர்வதேசத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறது மகிந்த அரசாங்கம். அதை அப்படியே மண்டையை ஆட்டி ஏற்றுக்கொண்டிருக்கிறது சர்வதேசமும் மனித நேய அமைப்புக்களும். கோடிக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொட்டும் வெய்யிலிலும் உறைபனியிலும் நின்று "எங்களுக்கு நீதி வேண்டும், எங்கள் சொந்தங்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று கதறிக்கூக்குரல் கொடுத்தும் சர்வதேசம் இறுக கண்மூடி தூங்குகின்றது. இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் 2000 உயிர்கள் அநியாயமாக காவுகொள்ளப்பட்டுள்ளது. 2500 இக்கும் அதிகமானவர்கள் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். கோவில்கள், தேவாலயங்கள், வைத்தியசாலைகள் என அடைக்கலம் தேடி புகுந்த மக்களையும் சர்வதேச போர் விதிமுறைகளையும் மதிக்காது குண்டு வீசி கொன்றொழித்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாதம். இதை கைகட்டி வாய்பொத்தி மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமா கொல்லப்படுவது புலிகள்தான் என்று அறிக்கையும் வேறு. வெள்ளைப்புறா வேசம் போட்ட குளிர் நாடும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை. வயிறுபிளந்து குடல் சிதறிக்கிடக்கும் சின்னக்குழந்தையும் தள்ளாத வயதில் தலை இல்லாமல் துண்டு துண்டாய்க் கிடக்கும் அப்புவும் ஆச்சியும் விடுதலைப்புலிகளா? இல்லை இரண்டு கைகளையும் இழந்து வலியால் குழறும் சின்னப்பொடியன் புலியா? என்னடா உங்கள் நீதி? காசாவில் நாலு வயது குழந்தை இறந்து விட்டால் வாய் கிழிய கத்துகிறீர்கள்.

நாய் ஒன்று நடுவீதியில் அடிபட்டால் நாலு பக்கத்துக்கு அனுதாப கட்டுரை எழுதும் சர்வதேச மனிதநேய வாதிகளே கொஞ்சம் மனச்சாட்சியோடு எங்கள் மக்களை திரும்பி பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் எடுத்திருக்கும் சில இறுக்கமான தீர்மானங்களையும் மனச்சாட்சி இல்லாத முடிவுகளையும் போல நாங்களும் அவசரமாக எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம்.

தமிழர்கள் இழிச்சவாயர்கள், குட்டக் குட்ட குனியும் மடையர்கள்.!, எது செய்யினும் ஏன் என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள்.!. தமிழன் உயிர் நாயிலும் கேவலமானது.!. மதிப்பில்லாதது. தமிழன் என்ற இனம் இனிமேல் இருக்கக்கூடாது. அவனுக்கென்று ஒரு நாடு வரலாற்றில் இருக்கவேகூடாது. இப்படியெல்லாம் நினைக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் சர்வதேச சண்டியர்களுக்கும் ஒன்றை மட்டும் கடைசியாய் கூறுகிறோம். என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கிறான் என்று யாரோ ஒருவன் சொன்னான்.

முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் கொத்துக்குண்டுகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசியும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை கொன்றொழித்தும் போராட்டத்தின் வடிவத்தையும் பாதையையும் மாற்றி விட்டான் எதிரி. வன்னியில் கேட்கின்ற அழுகுரல்களைப் போல் ஆயிரம் மடங்கு சிறிலங்காவின் மூலை முடுக்கேல்லாம் கேட்க வைப்பதற்கு தமிழர்களால் நினைத்தால் அரை நொடியில் முடியும். இதைத்தான் சிங்களப் பேரினவாதமும் மகிந்த அரசும் மனிதநேய அமைப்புக்களும் சர்வதேசமும் எதிர்பார்க்குமானால் அது வெகுவிரைவில் நடக்கும்.

அப்போதும் புலம் பெயர் தமிழர்களின் கைகளில் தான் இன்னொரு பணியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது சர்வதேசமே கண்திறந்து பார் என கூக்குரலிட்டு கதறும் நாங்கள், சிங்கள தேசம் கூக்குரலிட்டு அழும்போது கொடுக்கு கட்டிகொண்டு ஓடிவரும் சர்வதேச சண்டியர்களை நடப்பதை பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார் என்று அடக்கிவைக்க வேண்டியதும் நாம்தான்.

என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!

உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக் கொடியோ தேசியக்கொடியாகலாம்...

எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி.!

ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.

பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்

அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம் - ஆனாலும்

நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது

கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது

நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்

உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி

உடுக்கோசையும் காவடி ஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி

அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட

அம்மணமாக வாழ்வது மேல்.!

- தமிழ்ப்பொடியன் (சபா ரமணா)

Thursday, January 29, 2009

காலத்தின் கவிதை!

வீணாக நாங்கள்
விழ்வதில்லை,
விதைகளாகவே மண்ணில்
புதைகிறோம்!

வெற்றுடல்களாக நாங்கள்
விழ்வதில்லை,
மாபெரும் சரித்திரமாகவே
விழ்கிறோம்!

அல்ல
நம்மவர்கள் நிங்கள்
வாழ்வதற்காகவே
நாங்கள் சரித்திரமகின்றோம்!

குழிக்குள்ளும் எங்கள்
விழிகள் தூங்குவதில்லை,
எம் உடலின் தையல்கலேல்லாம்
உம்முடையவைதான்!

எங்களுக்கென்று வீடில்லை
ஏனெனில்
வீடே நாமானோம்!

எம் விழிகளின் முழிப்பில்தான்
உங்கள் விழிமடல்கள்
எப்போதும் திறந்து முடிக்கொள்கின்றன!

உங்களுக்கவே நாங்கள்
சுமைதாங்கியானோம்!
எல்லைகளில் நாங்கள் காய்வது
உங்களுக்கான நிழலுக்காக
மட்டுமல்ல
காவலுக்காகவும் தான்!

நட்டுவிட்ட துண்களாய்
கால்கடுக்க நாம்
நின்றதால் தான் - இன்று
நிங்கள் காலாறுகின்றிர்கள்!

மூச்சு வாங்க மூச்சு வாங்க
நாம் சுமந்த பாரங்க்களால் தான்
நிங்கள் இன்று
மூச்சு வாங்குகின்றிர்கள்!

வெற்றி வீரராய் நாம்
இருந்தபோதும்,
வெறும் வெட்டியார் போலவே
காட்டிக்கொண்டோம்!

கடவுள் பெயர் சொல்லி
கலவரங்கள் கரைகண்ட போதும்
"ஆதவனை" தவிர யாருக்கும்
தலைவணங்கிய சரித்திரமில்லை!

அன்று சங்குநாதம் பொழியும் போதும்,
களத்தில் நாம் இருந்தோம்
ஆயுதமாய்!
இன்று ஷெல் நாதம் பொழியும் போதும்
களத்தில் நாம் உள்ளோம் காவலரனாய்!

நாங்கள்
"மரங்கள்"

*--- ----*
இது 2003ஆம் ஆண்டு பாடசாலை போட்டி ஒன்றுக்காய் எழுதியது! ஒரு வார்த்தை ௯ட நான் இப்போது மாற்றவில்லை.
வார்த்தைகளின் சந்தங்கள் சரியாய வரவேண்டும் என்பதற்காய் ஒரு சில சொற்கள் அர்த்தம் தெரியாமலே அல்லது அப்படி ஒரு வார்த்தை இருக்குமா என்ற சந்தேகத்துடன் தான் எழுதினேன். அதை இப்போது எண்ணும் போது ...... முடியல அதை விடுங்க.....

இதை எழுதியபோது இருந்த களநிலவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளவார்கள் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை!!!

இத்தனை பார்க்கும் போது இது போல எங்கயோ வாசித்த மாதிரி இருக்கு என்கிறிர்களா?
எது என்று சொல்லுங்கள் பார்ப்பம்???

(இதனை முதலில் நான் காட்டியது எனது நண்பன் விமலாதித்தனுக்கு தான்! இந்த பதிவை கண்டிப்பாக வாசிப்பான் என தெரியும்! கண்டிப்பாய் கருத்து எழுத வேணும் என அவனுக்கு ஒரு அன்பு கட்டளை இடுகிறேன்)

இரா பிரஜீவ்
29/01/2009

Tuesday, January 27, 2009

வலைப்பூக்களில் பதிவாகும் திரை விமர்சனங்கள்; ஒரு பார்வை

கடந்த 10ம் திகதியிலிருந்து வலைப்பூக்களை திரட்டி தரும் அநேக தளங்களில் வில்லு படத்தின் விமர்சனங்கள் நிரம்பி வழிந்தன. முன்பு எல்லாம் பத்திரிகைகளில், பின்பு தொலைக்காட்சி அப்புறம் வானொலி என வந்த விமர்சனங்கள் இப்பொது வலைப்பூக்களில் தாரளமாக எல்லோராலும் எழுதப்படுகிறது. விமர்சனத்தின் விதிமுறை அறியாதோர் எழுதுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

சரி எழுதுவது அவரவர் உரிமை என வைத்து கொள்வோம், உதவாத படம் என ஒரு படத்தையே தாக்கி எழுதுவோர் நல்ல படங்களை பற்றி ஒரு வரியேனும் எழுதாமல் இருப்பது ஏன்?

இதை எண்ணி பார்க்கும் பொது ஒன்று மட்டும் புலனாகிறது. ஒரு நடிகரின் ரசிகர்கள் அவரின் படம் வரும் பொது அப்படத்தை தூக்கி வைத்து எழுதுவது (சண் தொலைக்காட்சி போல) மற்ற நடிகரின் படங்களை எப்பளவு நல்ல படமாக இருந்தாலும் தூற்றி எழுதுவதாகவே எனக்கு படுகிறது. இந்த நிலையில் இவர்களே சண் தொலைக்காட்சியை விமர்சிப்பதை என்னவென்று சொல்வது.

20 கோடியில் எடுக்கப்படும் படங்களை அது உதவாத படம் என்று தெரிந்தும் போய் பார்த்து முதளியாவது எடுக்க தயாரிப்பளருக்கு உதவுவோர் வெறும் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களை பார்க்காமல் அதுவும் போட்ட முதலையே எடுக்க முடியாமல் தயாரிப்பாளரை நட்டமுற செய்கிறார்கள்.

அண்மையில் வெளிவந்த பூ, பொம்மலாட்டம் போன்ற தரமான படங்களை பற்றி யாரவது எழுதினார்களா? எழுதியவர்களை கை விரல்களால் எழுதிவிடலாம். அது சரி இவர்கள் அப்படியான படத்தை பார்க்க மாட்டர்கள். பார்த்தால் தானே எழுதுவதற்கு.

அதிக பட்ஜெட்டில் வெளிவரும் படங்களை நாலைந்து தடவைகள் பார்ப்பவர்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் தரமான படங்களுக்கு ஒருதடவையேனும் சென்றால் இன்னும் ஆரோக்கியமான சினிமாக்கள் வெளிவர உதவியாய் இருக்கும்.

தென்னகத்தில் மட்டும் நடக்கும் ரசிகர்களின் ஆர்ப்படங்கள் தான் நல்ல சினிமாவை வெளிவருவதை தடுக்கிறது. இந்த நிலை வலைப்புக்களிலும் ஆரம்பமாவது ஆரோக்கியமான சினிமாவிற்கு நல்லதல்ல.

ஒரு சில உதாரணங்கள்
* தங்களின் தலைவருக்கு (?) அதாவது அவர்களுக்கு பிடித்த நடிகைன் பிள்ளையின் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஓட்டுவது, கண்ட கண்ட மாதிரி புகழ்வது.

* தங்கள் தலைவருக்கு (?) கிடைத்த கொளரவ டாக்டர் பட்டத்தை, அவர் பட்ட படிப்பு படித்து எடுத்தது போல காட்டி விளம்பரம் செய்வது

* பனருக்கு பாலாபிசேகம் செய்வது இப்போது பீர் அபிஷேகமும் நடக்குது.

* சொந்த செலவில் அவரவர்களுக்கு பிடித்த நடிக்க நடிகைகளுக்கு பனர் வைப்பது (இவ்வாறு வைப்பவர்கள் யார் என பார்த்தால் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் தான், அவரவர் குடும்பத்தின் நிலையை என்ன வென்று சொல்லவது)

இந்த பட்டியல் இப்படியே தொடரும் ...

இந்த நிலை இப்போது வலைப்புக்களில் ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. தவறுகள் திருத்தப்படனும். நல்ல தரமான சினிமாக்கள் வெளிவர எல்லோரும் உதவனும்..


இரா பிரஜீவ்
28/01/2009

Friday, January 23, 2009

மனது மறக்காத காதல் பாடல்கள்!

இந்த பாடலை எழுதியவர் யார்? தெரிந்தால் சொல்லுங்களேன் பார்ப்போம்?

பாடியவர்கள் சொளந்தர்ராஜன், பானுமதி
இசை KV மகாதேவன்
படம் தாய்க்கு பின் தாரம்
வெளியான ஆண்டு 1956

அஹா நம் ஆசை நிறைவேறுமா?
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா?
அன்பே சந்தேகம் கொள்ளலாமா?
கோடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா?

ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லுராக தோன்றுமோ?
வல்லுரானத்தை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்!

அமுத மொழி பேசி அழகாக பாய்வதால்
அகமே மகிழ்வேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல்
ஆனந்தம் ஆனேன் என் கண்ணே!

உமது ஆனந்தமே அழியாச்செல்வமே!
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே!
ஈருடல் ஒருயிராய் வாழுவோம்,
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்!


பாடலை இங்கே இப்போது சேர்க்க முடியவில்லை.
இரா பிரஜீவ்
24/01/2009

சினிமாவில் படத்தொகுப்பு... ஒரு அறிமுகம்!

இந்திய சினிமா நாடு ரீதியாக பார்த்தால் உலகத்தில் மிகப்பெரிய சினிமா, 2008ஆம் ஆண்டு தகவலின் படி அதிக அளவான பட்ஜெட்டில் (எல்லா படங்களின் பட்ஜெட்டையும் சேர்த்துத்தான்)படமெடுத்தும் இந்திய சினிமாதான், அதைவிட ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட்டினை கணிசமான அளவு அதிகரித்து மற்றைய சினிமாக்களின் வயிற்றில் புளியை கரைக்கும் வேலையையும் கடந்த ஐந்து வருடங்களாக உப தொழிலாகவே செய்து வருகிறது.

2008இல் மொத்த ஹாலிவுட் பட்ஜெட்டே 9.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள். 2007இனை விட 0.03 பில்லியன் டொலர்கள் குறைவானது. ஆனால் மொத்த இந்திய சினிமாவின் பட்ஜெட் 10 பில்லியன் டொலர்களை தாண்டும் என்கிறது இந்திய திரைப்பட தணிக்கை குழுவின் வலைத்தளம், ஆனால் கறுப்பு பணத்தின் விளையாட்டு அதிகமாக இருப்பதால் சரியான அளவு அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இந்தியாவில் உள்ள 415 பிரதான மொழிகளுள் கிட்டத்தட்ட 30 மொழிகளில் மட்டுமே திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதிலும் "Feature film" எனும் வரிசையில் பார்த்தால் 7 மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களே உள்ளடங்குகின்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளே அவை. இந்த ஒழுங்கு அதிக பணம் புழங்கும் வரிசையில் வருகிறது.

இவ்வளவு மாஜாஜால வித்தைகள் காட்டியும் இந்திய சினிமா உலக சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு அதன் தரம் இல்லாமைக்கு காரணம் என்ன?

1. அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு படங்களை அல்லது அதன் காட்சிகளை அப்பட்டமாக திருடுவது. ஆரம்பத்தில் பாடல்களில் மட்டுமே இருந்து வந்த இந்த திருட்டு வர வர காட்சிகளுக்கு மாறி இப்போது முழு படத்தையும் அப்படியே திருடுகிறார்கள். கேட்டால் impire என்று ஒரு redymade பதிலும் வைத்திருக்கிறார்கள்.

2. திரைப்படங்களுக்கு என்று ஒரு வகைப்படுத்தல் (Genre) இல்லாமை. ஒரே படத்தில் எல்லாமே இருப்பது உலக தரத்தை அடைவதை பெரும்பாலும் தடுக்கிறது. காரணம் எந்த வெளிநாட்டவரை கேட்டலும் அது என்ன "Genre" என்று தான் முதலில் கேட்பார்கள். பொதுவாக இந்திய சினிமாக்களுக்கு அவர்கள் வழங்கும் வகை Musical. காரணம் பாடல்கள் தான்.

3. பாடல்கள் : இந்திய சினிமாவின் தனிப்பெரும் சிறப்பம்சமே இந்த பாடல்கள் தான்!!! உலகமெங்கும் உள்ள பல நாடுகளின் திரையுலகங்கள் ஹாலிவுட் இன் பாதிப்பில் தம் பாதை மாறிப்போய்விட்ட நிலையில் குறிப்பாக அவுஸ்திரேலியாவின் திரையுலகின் இன்றைய நிலை, இந்திய சினிமாவில் ஹாலிவுட் இன் பாதிப்பு அவ்வளவுக்கு இல்லை எண்டே சொல்ல இன்னும் இந்திய திரைப்படங்களில் பாடல்கள் வருவதே ஒரே ஒரு சாட்சி.

என்னதான் ஓட்டு மொத்தமாக ஹாலிவுட் உடன் போட்டி போட முடியாவிட்டாலும் தொழில் நுட்பத்திலும் இற்கு சமமான தரத்தை பல வருடங்களாக தந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டவரின் ஆதிக்கம் இந்த துறையில் இந்தியா பூராகவும் அதிகம் அதிலும் ஒளிப்பதிவாளர்களின் ஆதிக்கம் சற்றே அதிகம். ரவி கே சந்திரன், மணிகண்டன், ரவிவர்மன், rd.ராஜசேகர் என இது ஒரு பெரும் பட்டியல்.

ஆனால் இட்கிடல் தொழில் நுட்பம் வந்தபின் ஒரு படம் எடுப்பது இலகுவாகிப்போனது(முன்னரோடு ஒப்பிடுகையில்). வழமையாக தொழில்நுட்பம் பலவற்றை அழகாக்கியது, இந்திய சினிமாவையும் அழகாக்கியது ஆனால் அதன் மேல் அதிகமாக கரியையும் பூசியது. இந்த இடத்தில் அமெரிக்க இசைத்தொகுப்புக்களின் படத்தொகுப்பின் பாணி இந்திய சினிமா முழுவதும் ஆக்கிரமிக்க தொடங்கியது... இன்று படம் முழுவதும் இந்த பாணியிலான கொடுமை. இன்று வருகின்ற குறிப்பாக தமிழ் படங்களின் படத்தொகுப்பினை என்னவென்று சொல்வது! படம் பார்த்து முடிய தலையிடிதான் மிஞ்சும். இதில் ஒரு சில படங்கள் விதிவிலக்கு. இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஒரு பட வீதம் படத்தொகுப்பும் ஒளிப்பதிவையும் பற்றி விமர்சனமாக இல்லாமல் ஒரு விளக்கமாக ஒரு பதிவை இட எண்ணியுள்ளேன்.


இரா பிரஜீவ்
23/01/2009

Thursday, January 22, 2009

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?



புதிதா ஒருவர் பிரபலம் அடைந்திட்டால் இப்படித்தான்!!!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா போல் தோற்றம் உடைய ஒருவர்!!!

நன்றி வீரகேசரி நாளிதழ்
81வது Academy Awards (OSCARS) இற்கான பரிந்துரைகள் நேற்று வெளியிடப்பட்டது அதன் விபரங்கள் வருமாறு

ACTOR IN LEADING ROLE
Richard Jenkins (THE VISITOR)
Frank Langella (FROST/NIXON)
Sean Penn (MILK)
Brad Pitt (THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON)
Mickey Rourke (THE WRESTLER)


ACTOR IN A SUPPORTING ROLE
Josh Brolin (MILK)
Robert Downey Jr. (TROPIC THUNDER)
Philip Seymour Hoffman (DOUBT)
Heath Ledger (THE DARK KNIGHT)
Michael Shannon (REVOLUTIONARY ROAD)


ACTRESS IN A LEADING ROLE
Anne Hathaway (RACHEL GETTING MARRIED)
Angelina Jolie (CHANGELING)
Melissa Leo (FROZEN RIVER)
Meryl Streep (DOUBT)
Kate Winslet (THE READER)


ACTRESS INA SUPPORTING ROLE
Amy Adams (DOUBT)
Penélope Cruz (VICKY CRISTINA BARCELONA)
Viola Davis (DOUBT)
Taraji P. Henson (THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON)
Marisa Tomei (THE WRESTLER)


ANIMATED FEATURE FILM
BOLT
KUNG FU PANDA
WALL-E


ART DIRECTION
CHANGELING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
THE DUCHESS
REVOLUTIONARY ROAD


CINEMATOGRAPHY
CHANGELING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
THE READER
SLUMDOG MILLIONAIRE


COSTUME DESIGN
AUSTRALIA
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DUCHESS
MILK
REVOLUTIONARY ROAD


DIRECTION
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
FROST/NIXON
MILK
THE READER
SLUMDOG MILLIONAIRE


DOCUMENTARY FEATURE
THE BETRAYAL (NERAKHOON)
ENCOUNTERS AT THE END OF THE WORLD
THE GARDEN
MAN ON WIRE
TROUBLE THE WATER


DOCUMENTARY SHORT
THE CONSCIENCE OF NHEM EN
THE FINAL INCH
SMILE PINKI
THE WITNESS - FROM THE BALCONY OF ROOM 306


FILM EDITING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
FROST/NIXON
MILK
SLUMDOG MILLIONAIRE


FOREIGN LANGUAGE FILM
THE BAADER MEINHOF COMPLEX
THE CLASS
DEPARTURES
REVANCHE
WALTZ WITH BASHIR


MAKEUP
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
HELLBOY II: THE GOLDEN ARMY


MUSIC (SCORE)
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
DEFIANCE
MILK
SLUMDOG MILLIONAIRE
WALL-E


MUSIC (SONG)
"Down to Earth" (WALL-E)
"Jai Ho" (SLUMDOG MILLIONAIRE)
"O Saya" (SLUMDOG MILLIONAIRE)


BEST PICTURE
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
FROST/NIXON
MILK
THE READER
SLUMDOG MILLIONAIRE


SHORT FILM (ANIMATED)
LA MAISON EN PETITS CUBES
LAVATORY - LOVESTORY
OKTAPODI
PRESTO
THIS WAY UP


SHORT FILM (LIVE ACTION)
AUF DER STRECKE (ON THE LINE)
MANON ON THE ASPHALT
NEW BOY
THE PIG
SPIELZEUGLAND (TOYLAND)


SOUND EDITING
THE DARK KNIGHT
IRON MAN
SLUMDOG MILLIONAIRE
WALL-E
WANTED


SOUND MIXING
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
SLUMDOG MILLIONAIRE
WALL-E
WANTED

VIAUAL EFFECTS
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
THE DARK KNIGHT
IRON MAN


WRITING (ADOPTED SCREENPLAY)
THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON
DOUBT
FROST/NIXON
THE READER
SLUMDOG MILLIONAIRE


WRITING (ORIGINAL SCREENPLAY)
FROZEN RIVER
HAPPY-GO-LUCKY
IN BRUGES
MILK
WALL-E


அதிகமான ஆங்கில எழுத்துக்களும் தமிழ்படுத்தினால் வருகின்ற குழப்பத்தை தவிர்க்கவும் ஆங்கிலத்திலேயே தரவேண்டிய கட்டாயம் ஆகிறது.

முதல் முறையாக ஒரு தமிழனுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது நமக்கெல்லாம் பெருமைப்படும் விஷயம் தானே!!!

பாடல்களுக்கான விருது ஆரம்பத்திலேயே வழங்கப்படுவதால் விருதுகள் வழங்கும் நிகழ்வின் ஆரம்பத்திலேயே இதன் முடிவை தெரிந்த கெள்ளலாம், பின்னணி இசைக்கான முடிவுக்கு கொஞ்சம் அதிகமாகவே காத்திருக்க வேண்டியிருக்கும். அனேகமாக விழாவின் கடைசி பாதிவரை...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!!!

இரா பிரஜீவ்
23/01/2009

Tuesday, January 20, 2009

2008இன் வசூல் கணக்கு

கடந்த வருடம் வெளிவந்து வசூலில் 100 மில்லியன் டொலர்களை தாண்டிய ஹாலிவுட் படங்களின் வரிசை. இதில் பல தோல்விப்படங்கள் உள்ளன முடிந்தால் சொல்லுங்கள்....
பதில் வெகு விரைவில்....


25.You Don't Mess With the Zohan ($100 million)

24. Step Brothers ($100.5 million)

23. Eagle Eye ($101.1 million)

22. Journey to the Center of the Earth ($101.7 million)

21. The Mummy: Tomb of the Dragon Emperor ($102.2 million)

20. Bolt ($104.5 million)

19. Tropic Thunder ($110.4 million)

18. Four Christmases ($111.6 million)

17. Juno ($112 million)

16. Get Smart ($130.3 million)

15. Wanted ($134.3 million)

14. The Incredible Hulk ($134.5 million)

13. The Chronicles of Narnia: Prince Caspian ($141.6 million)

12. Mamma Mia! ($143.7 million)

11. Sex and the City ($152.6 million)

10. Horton Hears a Who! ($154.5 million)

9. Quantum of Solace ($164.3 million)

8. Twilight ($169.9 million)

7. Madagascar: Escape 2 Africa ($174.9 million)

6. Kung Fu Panda ($215.4 million)

5. WALL·E ($223.8 million)

4. Hancock ($227.9 million)

3. Indiana Jones and the Kingdom of the Crystal Skull ($317 million)

2. Iron Man ($318.3 million)

1. The Dark Knight ($530.9 million)

இது 2008இன் கணக்கு மட்டும் தொடர்ந்து 2009இலும் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் கணக்குகள் சேர்க்கப்படவில்லை

புதுக்கதை ஆனா பழைய விஷயம்!!!

கொஞ்சம் வில்லங்கமான அல்லது சுவாரசியமான பதிவு ஒன்றை இடவேணும் என்று பல நாட்களாக ஒரு ஆசை... கடைசியாக புதிதாக தகவலை தேடுவதை விட தெரிந்ததை பதியலாம் என இதோ தொடங்கிவிட்டேன்...

அது சரி என்னத்தை பற்றி எழுத போகிறேன்...

எனது மேற்படிப்புக்காய் நிறைய தேடல்கள்... வழமையா எல்லா துறையையும் போலத்தான். ஆனா எனது துறை கொஞ்சம் வேறுபட்டது, படத்தொகுப்பு...

ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற பல கால இலட்சியத்தையும் இந்த சிட்னி மாற்றிவிட்டது. எனினும் யாருடைய உதவியும் கிடைக்காமையினால் சரியான படிப்பை தெரிந்து கொள்ளவதற்கே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன... இப்போதுதான் சரியான அதுவும் மிகச்சரியான படிப்பை தொடருகிறேன்... அனுபவம் தான் மிகச்சிறந்த ஆசான் என்பதை பல ஆயிரம் டொலர்களையும் இரண்டு வருட வாழ்க்கையையும் தொலைத்து உணர்ந்து கொண்டேன்.

சரி இனி விடயத்துக்கு வருவோம்.

வரப்போகும் இந்த தொடர் ஆக்கம் முழுக்க முழுக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி படத்தொகுப்பு மற்றும் அதனுடன் சம்பந்தமானது. எதோ எனக்கு தெரிந்த நான் அறிந்த விடயங்களை உங்களுடன் பகிரப்போகிறேன்...

இந்த தொடர் ஒரு விமர்சனம் மட்டும் இல்லாமல் அதன் நல்ல பக்கங்களை உங்களுடன் பகிரப்போகிறேன்....

இப்பவே எழுதணும் போல இருந்தாலும் நேரப்பற்றாகுறை காரணமா அடுத்த வாரத்திலிருந்து வாரா வாரம் வரும்...


இரா பிரஜீவ்
20/01/2009