இந்த பாடலை எழுதியவர் யார்? தெரிந்தால் சொல்லுங்களேன் பார்ப்போம்?
பாடியவர்கள் சொளந்தர்ராஜன், பானுமதி
இசை KV மகாதேவன்
படம் தாய்க்கு பின் தாரம்
வெளியான ஆண்டு 1956
அஹா நம் ஆசை நிறைவேறுமா?
கடல் அலையைப்போல மறைந்து போக நேருமா?
அன்பே சந்தேகம் கொள்ளலாமா?
கோடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா?
ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே
எண்ணிடும் போதில் பகை வல்லுராக தோன்றுமோ?
வல்லுரானத்தை வனத்தில் வாழும் வேடனாகி நான்
வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால்!
அமுத மொழி பேசி அழகாக பாய்வதால்
அகமே மகிழ்வேன் அத்தானே
உன் அழகே நீரோடை அதில் நீந்தும் மீனைப்போல்
ஆனந்தம் ஆனேன் என் கண்ணே!
உமது ஆனந்தமே அழியாச்செல்வமே!
ஆருயிரே நான் உனக்கே சொந்தமே!
ஈருடல் ஒருயிராய் வாழுவோம்,
சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்!
பாடலை இங்கே இப்போது சேர்க்க முடியவில்லை.
இரா பிரஜீவ்
24/01/2009
Friday, January 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment