கொஞ்சம் வில்லங்கமான அல்லது சுவாரசியமான பதிவு ஒன்றை இடவேணும் என்று பல நாட்களாக ஒரு ஆசை... கடைசியாக புதிதாக தகவலை தேடுவதை விட தெரிந்ததை பதியலாம் என இதோ தொடங்கிவிட்டேன்...
அது சரி என்னத்தை பற்றி எழுத போகிறேன்...
எனது மேற்படிப்புக்காய் நிறைய தேடல்கள்... வழமையா எல்லா துறையையும் போலத்தான். ஆனா எனது துறை கொஞ்சம் வேறுபட்டது, படத்தொகுப்பு...
ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற பல கால இலட்சியத்தையும் இந்த சிட்னி மாற்றிவிட்டது. எனினும் யாருடைய உதவியும் கிடைக்காமையினால் சரியான படிப்பை தெரிந்து கொள்ளவதற்கே இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன... இப்போதுதான் சரியான அதுவும் மிகச்சரியான படிப்பை தொடருகிறேன்... அனுபவம் தான் மிகச்சிறந்த ஆசான் என்பதை பல ஆயிரம் டொலர்களையும் இரண்டு வருட வாழ்க்கையையும் தொலைத்து உணர்ந்து கொண்டேன்.
சரி இனி விடயத்துக்கு வருவோம்.
வரப்போகும் இந்த தொடர் ஆக்கம் முழுக்க முழுக்க சினிமா மற்றும் தொலைக்காட்சி படத்தொகுப்பு மற்றும் அதனுடன் சம்பந்தமானது. எதோ எனக்கு தெரிந்த நான் அறிந்த விடயங்களை உங்களுடன் பகிரப்போகிறேன்...
இந்த தொடர் ஒரு விமர்சனம் மட்டும் இல்லாமல் அதன் நல்ல பக்கங்களை உங்களுடன் பகிரப்போகிறேன்....
இப்பவே எழுதணும் போல இருந்தாலும் நேரப்பற்றாகுறை காரணமா அடுத்த வாரத்திலிருந்து வாரா வாரம் வரும்...
இரா பிரஜீவ்
20/01/2009
Tuesday, January 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல முயற்சி, ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். தமிழ்மணத்திலும் உங்கள் பதிவை இணைத்தால் நிறையப் பேர் பார்க்க ஏதுவாக இருக்கும்.
ஆகா... எழுதுங்கோ... எழுதுங்கோ...!!!
//ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற பல கால இலட்சியத்தையும் இந்த சிட்னி மாற்றிவிட்டது.//
கொள்கைவீரர்தம் இலட்சியங்கள் மாறுவதில்லை. அவை விதைகளைப்போல எழத்தேவையான சூழலுக்கான
காத்திருப்புக்களோடு நமக்குள் உறைந்திருக்கின்றன.
காலம் வர, வானளாவ உயர்ந்தோங்கி வளர்ந்து, பலருக்கு நிழலையும் கனியையும் தருவன.
Post a Comment